கிருஷ்ணகிரி

பெண்ணுக்கு வரதட்சிணைக் கொடுமை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்

DIN

ஒசூரில் இளம் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை அளித்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஒசூர் வி.ஐ.பி. நகர் விவேக் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சாய் ரம்யா கட்டா (26). இவருக்கும், மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சௌத்ரி  (31) என்பவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் சாய் ரம்யா கட்டாவை அவரது கணவர் வீட்டினர் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஒசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் அட்கோ காவல் ஆய்வாளர் பெரியசாமி விசாரித்து கணவர் ராகேஷ் சௌத்ரி, அவரது குடும்பத்தினர் கிருஷ்ணராவ், கிரண்ராவ்,  ரக்ஷிதா சௌத்ரி ஆகிய 4  பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT