கிருஷ்ணகிரி

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

DIN

ஊத்தங்கரையில்  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்  சங்கம் சார்பில்  வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில்  திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் கே.செல்வராசு தலைமை வகித்தார். வி.வேலு,  எ.கணேசன், வி.சுப்பிரமணி, மொளுகு,  ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.கோவிந்தசாமி வாழ்த்தி பேசினார். 
இதில் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT