கிருஷ்ணகிரி

நண்பரைக் கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது

DIN

ஒசூர் அருகே நண்பரைக் கொலை செய்த வழக்கில்
இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஒசூரை அடுத்த கெலமங்கலம் தொட்ட பேளூரைச் சேர்ந்த லோகேஷ் (28), அதே பகுதியைச் சேர்ந்த குன்னய்யா (22) ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த 17-ஆம் தேதி இருவரும் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் லோகேஷை கொலை செய்துவிட்டு குன்னய்யா தலைமறைவானார். இந்த நிலையில், தொட்ட பேளூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சிலம்பரசனிடம் சரணடைந்த குன்னய்யாவை கெலமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.விசாரணையில், குன்னையாவிடம் ரூ.5 ஆயிரம் கடனாக வாங்கியிருந்த லோகேஷ், பணத்தை தரவில்லையாம். இந்த நிலையில் இருவரும் மது அருந்திய போது பணத்தை கேட்டதால் ஏற்பட்ட தகராறில் லோகேஷை குன்னய்யா கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அக் கிராமத்தைச் சேர்ந்த மேலும் 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

SCROLL FOR NEXT