கிருஷ்ணகிரியில் ஜன.25-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஜன.25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஜன.25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. ஜன.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.