கிருஷ்ணகிரி

சிறப்பு பயிற்றுநர்களுக்கு பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள், சிகிச்சை அளிப்போர்

DIN

கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள், சிகிச்சை அளிப்போர் (தெரபிஸ்ட்டுகள்) ஆகியோருக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில், வியாழக்கிழமை தொடங்கிய இந்த பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது, பயிற்றுநர்களுக்கு கைக்கணினிகளை வழங்கி, அதன் நோக்கம், பயன்பாடு குறித்து அவர் பேசினார்.  
கைக்கணினி மூலம் ஆட்டிஸம், மனவளர்ச்சி குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மூளை முடக்குவாதம், பார்வைக் குறைபாடு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான மாற்றுத் திறன் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்றுத் தருவது குறித்தும், புலன் ஒருங்கிணைப்பு, ஒலி வேறுபாடு, உறவு முறைகள், உடல் பாகங்கள், பழங்கள், விலங்குகள் ஆகியவை குறித்தும் செயலி மூலம் எளிதாக கற்றுத் தர முடியும் என்றார்.
இந்தப் பயிற்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பயிற்றுநர்கள், சிகிச்சையளிப்பாளர்கள் என 52 பேர் பங்கேற்று
வருகின்றனர். 
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT