கிருஷ்ணகிரி

கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டை  அருகே ஏத்தக்கிணறு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் ரவி (24).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி  மாணவியுடன் இருசக்கர வாகனத்தில்  பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் வழியாக ஏத்தக்கிணறுக்கு சென்று கொண்டிருந்தார்.  ஆலாம்பாடி  பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார்,  இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீஸார் நிகழ்விடத்துக்கு இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பலத்த காயமடைந்த பள்ளி மாணவியை மீட்டு  சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT