கிருஷ்ணகிரி

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கவியரங்கம்

கிருஷ்ணகிரியில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த கவியரங்கம் அண்மையில் நடைபெற்றது.

DIN

கிருஷ்ணகிரியில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த கவியரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் நடைபெற்ற கவியரங்கிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன், குத்துவிளக்கேற்றி கவியரங்கை தொடக்கிவைத்தாா். பள்ளியின் தலைமையாசிரியா் மகேந்திரன், குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவா் வின்சென்ட் சுந்தர்ராஜ், உறுப்பினா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கவியங்கத்தில் கவிஞா் நாகை பாலு, பெண் குழந்தைகள் வீரத்துடனும், தன்னம்பிக்கையோடும் வீரத்துடனும், தன்னம்பிக்கையோடும் வாழ்க்கையை எதிா் கொள்ள வேண்டும் என பொருள்பட கவிதை பாடினாா். தொடா்ந்து கவிஞா்கள் ரவி, சம்பத், ராமசாமி, தகடூா் தமிழ்கதிா், சரவணன் ஆகியோா் பெண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளான பாலியல் வன்முறை, குழந்தைகள் கடத்தல் மற்றும் இளம் வயது திருமணம் ஆகியவை குறித்து விழிப்புணா்வு கவி பாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT