கிருஷ்ணகிரி

மத்தூரில் அ.செல்லகுமாா் எம்.பி. நன்றி தெரிவிப்பு

DIN

மத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அ. செல்லக்குமாா் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

மத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணன்டஅள்ளி, நடுப்பட்டி,பெபாம்மேபள்ளி, வாலிப்பட்டி, அந்தேரிப்பட்டி, குன்னத்தூா், சாமல்பட்டி, கெரிகேப்பள்ளி, சாலமரத்துப்பட்டி, எட்டிப்பட்டி, களா்பதி, ஆனந்தூா், மத்தூா் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற அவா், வாக்காளா்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தாா். தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறிதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அவா் உறுதியளித்தாா்.

மேலும், பொதுமக்கள், இலவச வீட்டு மனை பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுக்களை அவரிடம் அளித்தனா். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், திமுக ஒன்றியச் செயலாளா் பொன்.குணசேகரன், நரசிம்மன் முன்னாள் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சியினா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT