கிருஷ்ணகிரி

கட்டுமான தொழிலாளர் நல வாரிய கணினி இயக்குபவர் பணி தேர்வு முடிவு ரத்து

DIN

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து,  கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) த.முருகேசன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு, அக்டோபரில் , இணையதளம் மற்றும் நாளிதழ்களில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
அதன்படி, கடந்த 8-ஆம் தேதி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. தற்போது, இந்த எழுத்துத் தேர்வு, தேர்வு முடிவுகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. தேர்வு நடத்தும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT