கிருஷ்ணகிரி

ஒசூரில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

DIN

ஒசூர் சிப்காட் அரிமா சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 11 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஒசூர் சிப்காட் அரிமா சங்கத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஒசூர் கல்வி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். ஒசூர் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி ஆகியோர் ஆசிரியர்களைக் கெளரவித்தனர்.  ஒசூர் ஒன்றியத்தில் தொரப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர் பிரசாத், ஒசூர் அரசு தெலுங்கு பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியம், ஆசிரியை ஈஸ்வரிபாய், எஸ்.முதுகானப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர் கீதா,  சித்தனப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியை புஷ்பா, ஒன்னல்லவாடி பள்ளி துளசி ஆகிய ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT