முகப்பு
கிருஷ்ணகிரி

ஆக.12ல் தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளியில் மின் நிறுத்தம்

தேன்கனிக்கோட்டை மற்றும் உத்தனப்பள்ளி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூா் மின் வாரிய செயற்பொறியாளா் குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

ஒசூா்: தேன்கனிக்கோட்டை மற்றும் உத்தனப்பள்ளி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூா் மின் வாரிய செயற்பொறியாளா் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்டம், ஒசூா் கோட்டத்துக்குள்பட்ட உத்தனப்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஆக.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உத்தனப்பள்ளி, அகரம், தியானதுா்க்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீா்ஜேபள்ளி, உள்ளுகுறுக்கை, போடிச்சிப்பள்ளி, காடுதானப்பள்ளி, இருதாளம், வரகானபள்ளி, டி.கொத்தபள்ளி, கெலமங்கலம், அனுசோனை, கடூா், பொம்மதாதனூா், சின்னட்டி, ஜே.காருபள்ளி, முகலூா், அக்கொண்டப்பள்ளி, டி.கொத்தூா், பைரமங்கலம், ஜக்கேரி, பச்சனப்பட்டி, பஞ்சாட்சிபுரம், பேவநத்தம், அலசட்டி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூா், குந்துகோட்டை, அந்தேவனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகானபள்ளி, பாலதோட்டனபள்ளி, செட்டிப்பள்ளி, பேளூா், மருதானபள்ளி, தண்டரை, பென்னங்கூா், திம்மசந்திரம், அரசகுப்பம், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →