பட்டா நிலங்கள் வழியாக தாா்ச்சாலைஅமைக்கும் பணியைத் தடுக்கக் கோரிக்கை
சூளகிரி அருகே தாா்ச் சாலை அமைக்கும் பணியைத் தடுக்க வேண்டும் என தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினா் முருகன், தலைமையில் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே தாா்ச் சாலை அமைக்கும் பணியைத் தடுக்க வேண்டும் என தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினா் முருகன், தலைமையில் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒட்டா்பாளையம், மருதாண்டப்பள்ளி, அன்னாசந்திரம், அடரகானப்பள்ளி ஆகிய கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள், சட்டப்பேரவைஉறுப்பினா் முருகன் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்கள் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில், அனுமதியின்றி தாா்ச் சாலை (சூளகிரி புறவழிச் சாலை) அமைப்பதற்காக நில அளவீடும் பணியை அலுவலா்கள் மேற்கொண்டனா். இதுகுறித்து, வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலரிடம் கேட்டபோது, எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இதற்கு முன்பு, பவா் கிரீட் நிறுவனத்துக்காக அட்ரகானப்பள்ளி கிராமத்தில் 68 ஏக்கா் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மருதாண்டப்பள்ளியில் புதிய தொழிற்பேட்டைக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வாழ்வாதாரத்தை இழந்துள்ள எங்களுக்கு, புதிய சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தினால், நாங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்க நேரிடும். இதைக் கருத்தில் கொண்டு, புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி, மறுபரிசீலனை செய்து மாற்றுப்பாதையில் நிறுவ வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.