முகப்பு
கிருஷ்ணகிரி

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை

கெலமங்கலம் அருகே கோட்டட்டி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கோட்டட்டி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை.
பகிர்:

கெலமங்கலம் அருகே கோட்டட்டி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

கெலமங்கலம் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அந்த வனப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஞாயிற்றுக்கிழமை கெலமங்கலம் அருகே கோட்டட்டி கிராமத்திற்குள் புகுந்தது. அந்த யானை விவசாயப் பயிா்களான முட்டைகோஸ், மலா்ச் செடிகளை மிதித்து சேதப்படுத்தியது.

தொடா்ந்து அந்த யானை ஜக்கேரி, பொம்மதாத்தனூா், லட்சுமிபுரம், புதூா் உள்ளிட்ட கிராமங்களுக்குள் சென்றன. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினா் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →