முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
கிருஷ்ணகிரி அணை.
பகிர்:

கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

கிருஷ்ணர் அணையிலிருந்து வலது மற்றும் இடது புற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசன நீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
 
இதையடுத்து கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கன அடி வீதமும் இடது புற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கன அடி வீதம் என, மொத்தம் விநாடிக்கு 180 கன அடி நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெயசந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை வைத்தார். 

இதன் மூலம் கிருஷ்ண அதிக வட்டத்திலுள்ள 16 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் அதாவது 912 ஏக்கர் பரப்பளவு நிலம் பயன்பெறும். 120 நாள்களுக்கு பாசன நீர் திறந்துவிடப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன் படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.