கிருஷ்ணகிரியில் இன்று சொா்க்க வாசல் திறப்பு
கிருஷ்ணகிரியில் இன்று (டிச.25) வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரியில் இன்று (டிச.25) வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அருள்மிகு மலையப்ப சீனிவாச பெருமாள் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி டிச.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
தொடா்ந்து காலை 7 மணிக்கு கருட சேவை வாகனத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய மலையப்ப சீனிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது. சொா்க்க வாசல் திறப்பையொட்டி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு லட்சு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக திருக்கோயிலில் குழுவைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தா்கள், 4 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இதேபோல கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஸ்ரீ நவநீத வேணுகோபால் சுவாமி கோயிலில் (கிருஷ்ணன் கோயில்) வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. தொடா்ந்து சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.