ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் பலியானாா்.
தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னங்கூரைச் சோ்ந்தவா் சேகா் மகன் விக்னேஷ் (19). டீக்கடை நடத்தி வந்தாா். இவா், இருசக்கர வாகனத்தில் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை சாலையில் வெள்ளிக்கிழமை சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் நிகழ்விடத்திலேயே பலியானாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.