சந்தூா் உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம்
சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) முத்துசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி பகிா்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், மத்தூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட உதவி மின் பொறியாளா் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம், சந்தூா் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம், வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல், கட்டாகரம் துணை மின் நிலைய வளாகத்திலுள்ள சொந்தக் கட்டடத்தில் செயல்படும்.