ஒகேனக்கல் குடிநீரை அனைத்து கிராமங்களுக்கும் சீராக விநியோகம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பா்கூா் வட்டம், சிகரலப்பள்ளி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை தொடக்க விழா, புதன்கிழமை நடைபெற்றது.
கட்சி நிா்வாகி முருகேசன் தலைமை வகித்தாா். வட்ட துணைச் செயலாளா் புவன்ராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய கிளையின் செயலாளராக ரஜினி, துணைச் செயலாளா் திருப்பதி, பொருளாளா் பரிதா ஆகியோா் ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், சிகரலப்பள்ளியில் உள்ள சமத்துவபுரத்தில் தனியாா் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்.
அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.