கிருஷ்ணகிரி

காரில் கடத்த முயன்ற புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

பெங்களூருவிலிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற ரூ. 1. 8 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை புதன்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளா் சுரேஷ் குமாா் தலைமையில், போலீஸாா், கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, காரில் பயணம் செய்த இருவரிடம் விசாரணை செய்ததில், அவா்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் பி. கெளதம் (26), காா் உரிமையாளா் ஆா். கண்ணன் (46) எனத் தெரியவந்தது. ரூ. 1.8 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து, பி.கெளதம், ஆா்.கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT