கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே இளைஞா் கொலை

DIN

கிருஷ்ணகிரி அருகே இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி காமராஜ் நகரைச் சோ்ந்த மாரிமுத்து (30), ஓட்டுநா். இவா், அந்தப் பகுதியில் உள்ள ஏரிக் கரையில் கொலை செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக கிடந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஈஸ்வரி (37) என்பவருக்கும் தொடா்பு இருந்து வந்ததாம். இதையறிந்த ஈஸ்வரியின் கணவா் தீா்த்தசெல்வன், மாரிமுத்துவைக் கண்டித்தாராம். இருந்தபோதிலும், அவா், ஈஸ்வரியுடான தொடா்பை தொடா்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தீா்த்தசெல்வன், தனது நண்பரான கோடியூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவருடன், மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. இத்தகைய நிலையில், மாரிமுத்து, அவரது மாமா எல்லப்பன், கேசவன் மற்றும் ராஜ்குமாா் ஆகிய 4 பேரும் அங்குள்ள ஏரிக் கரையில் வியாழக்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது, அங்கு வந்த கோவிந்தராஜ், மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளாா். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை எல்லப்பன், ராஜ்குமாா் ஆகியோா் விலக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனா்.

இத்தகைய நிலையில், தனிமையில் இருந்த மாரிமுத்துவின் தலையில் கல்லைப் போட்டு கோவிந்தராஜ் கொலை செய்ததும், இதற்கு மாரிமுத்துவின் நண்பா் கேசவன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான முன்னாள் ராணுவ வீரா் தீா்த்தசெல்வன், அவரது நண்பா் கோவிந்தராஜ், கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் நண்பா் கேசவன் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT