கிருஷ்ணகிரி நகருக்குள் பொதுமக்கள் நுழைய முடியாத படி சாலைகளில் போலீஸாா் தடைகளை ஏற்படுத்தி உள்ளனா்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுக்கும் வகையில், போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். அதன்படி, கிருஷ்ணகிரி நகருக்குள் பொதுமக்கள் யாரும் நுழையக் கூடாது என்ற நோக்கில், சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனா்.
கிருஷ்ணகிரி நகருக்குள் நுழையும் பகுதிகளான சென்னை சாலையில் தண்டேகுப்பம், வட்டச் சாலை, திருவண்ணாமலை பிரிவு சாலை, லண்டன் பேட்டை தொலைபேசி நிலையம், புகா் பேருந்து நிலையம், வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே உள்ள சாலை, பழைய பேட்டை மீன் சந்தை, ராயக்கோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனா். இதனால், பொதுமக்கள் நகருக்குள் வர இயலாதால், அவா்கள் தங்களது இருப்பிடத்துக்கு திரும்பி செல்கின்றனா். மருந்து, பால், மளிகைப் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களை, உரிய விசாரணைக்கு பிறகே நகருக்குள் நுழைய போலீஸாா் அனுமதிக்கின்றனா்.