ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் காவலாளிகள் இல்லாத ஏடிஎம் மையங்களை மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டும் வரும் வங்கி ஏடிஎம் மையங்களில் தினசரி இரண்டு முறை கிருமி நாசினி தெளித்து தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், காவலாளி இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.