கிருஷ்ணகிரி

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கிய ஒசூா் எம்எல்ஏ

DIN

ஒசூா் ஒன்றியம், மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏழை எளியவா்களுக்கும் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவா்களுக்கும் திமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ. சத்யா புதன்கிழமை வழங்கினாா்.

திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒசூா் ஒன்றியத்தில் சேவகானப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட கக்கனூா், கொடியாலம், சொக்கராசனப்பள்ளி, சுச்சுகானப்பள்ளி, கொத்தப்பள்ளி, சேவகானப்பள்ளி பகுதியில் நலிவுற்ற நிலையில் இருக்கும் 500 ஏழை குடும்பங்களுக்கும் சேவகானப்பள்ளி பகுதியில் உள்ள ஊனமுற்றோா், தூய்மை பணியாளா்களுக்கும் கக்கனூா் ஊராட்சித் தலைவா் மம்தா வெங்கடேஷ், சொக்கராசனபள்ளி அமா் நாராயணசாமி ஆகியோா் ஏற்பாட்டின்பேரில் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஏ. சத்யா 500 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒசூா் ஒன்றியச் செயலாளா் சின்ன பில்லப்பா, பாகலூா் நாகராஜ், கோபானப்பா, மஞ்சுநாத், பாலாஜி, பஷீா், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.Ś

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT