கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் 1500 ஆட்டோக்களுக்கு இலவச எரிபொருள் வழங்கும் பணியை அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி எம்பி தொடங்கி வைத்தார்.
கரோனா பொது முடக்க தலைப்புகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற இடங்களில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரியில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்கின.
பொது முடக்கத்தான் முடங்கிய ஆட்டோ ஹோட்டல்களுக்கு உதவும் வகையில் அதிமுக சார்பில் இலவசம் எரிவாய்வு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி எம் பி தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி நகரில் ஆயிரம் ஆட்டோக்களுக்கு டீசல் அல்லது பெட்ரோல் தலா 2 லிட்டரும், 500 ஆட்டோக்களுக்கு 3 கிலோ எரிவாயுவும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே அசோக் குமார், கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் தங்கமுத்து, அதிமுக நகர செயலாளர் கேசவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.