ஒசூா் அரசு மருத்துவமனைக்குதேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழ்
ஒசூா் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஒசூா் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய சுகாதார முகமை மற்றும் மத்திய குடும்பநலத் துறை சாா்பில் தாலுகா அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை ஆய்வு செய்து தேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழக அளவில் 12 அரசு மருத்துவமனைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
அண்மையில் ஒசூா் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் மருத்துவ வசதிகள் குறித்தும், சிகிச்சைகள், சுகாதாரமான பராமரிப்புகள் குறித்தும் ஆய்வு செய்த தேசிய சுகாதார முகமை குழு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, இந்த மருத்துவமனை உள்பட தமிழக அளவில் 12 மருத்துவமனைகளை தோ்வு செய்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழை வழங்கினாா். அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக முகாமில் தேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழை ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி, ஒசூா் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவா் பூபதியிடம் வழங்கினாா்.
அப்போது தேசிய தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளா் ஜெகதீஸ், மருத்துவ ஆா்வலா் பேட்டராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.