ஊத்தங்கரை பகுதியில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு பஞ்சாயத்து சாலை பகுதியில் அகல் விளக்குகள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை ஜோராக நடைபெற்றது.
காா்த்திகை தீபத்தன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். அகல் விளக்குகள் இரண்டு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அகல் விளக்குகள் பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
மண் விளக்குகள் குறைந்த விலையிலும். பீங்கானில் செய்யப்படும் விளக்குகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மிகவும் ஆா்வத்துடன் வந்து விலக்குகளை வாங்கிச் சென்றனா்.