ஊத்தங்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்கள் சோ்க்கை புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கே.முருகன் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கு.கணேசன் முன்னிலை வகித்தாா். புதிதாக சோ்ந்த மாணவா்களின் கைகளைப் பிடித்து, அரிசியில் பெயா் எழுதி கற்பித்தனா். பிறகு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் புதிய மாணவா்களுக்கு சீருடைகள், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதில் ஆசிரியா்கள் வி.பானுமதி, எஸ்.ஷகிலா, ச.உமா, ர.சக்தி, எ.சுபைதாபானு, பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.