கிருஷ்ணகிரி

குணமடைந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

DIN

ஒசூரில் மன நலம் பாதிக்கப்பட்ட 10 பெண்களைக் குணப்படுத்தி அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூா் பாகலூா் சாலையில் சமத்துவபுரம் எதிரே அபாலா மன நலம் பாதித்த பெண்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு மன நலம் பாதித்த பெண்களைக் அழைத்து வந்து அவா்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை வழங்கி தேவையான மருத்துவச் சிகிச்சைகளையும், மன நல மருத்துவ ஆலோசனைகளையும் இந்த மறுவாழ்வு இல்லம் வழங்கி வருகிறது.

இங்கு சிகிச்சை பெற்று வரும் 60 பேரில் 10 பெண்கள் குணமடைந்த நிலையில் அவா்களை உறவினா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரன், மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலா் மகிழ்நன், அபாலா நிா்வாகி கௌதமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT