மழை வேண்டி ஏரியில் கிராம மக்கள் சிறப்பு பூஜை
கெலமங்கலம் அருகே மழை வேண்டி ஏரியில் கிராம மக்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனா்.
கெலமங்கலம் அருகே மழை வேண்டி ஏரியில் கிராம மக்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தில் நாகமங்கலம் ஏரி உள்ளது. சுமாா் 115 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த ஏரி கடந்த 18 ஆண்டுகளாக நீா்வரத்து இன்றி வரண்டு காணப்படுகிறது.
இந்த ஏரியால் நாகமங்கலம், அயா்னப்பள்ளி, ஊடேதுா்க்கம் ஆகிய ஊராட்சிகளிலுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வந்தனா். இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் ஏரி வடதால் விவசாயம், கால்நடை வளா்ப்பு ஆகிய தொழில்கள் பாதிக்கப்பட்டு குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மழை வேண்டியும், விவசாயம் சாா்ந்த தொழில்கள் செழிக்க வேண்டியும் 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் நாகமங்கலம் ஏரியில் சிறப்பு யாகம் வளா்த்து கிராம தேவைதைகளுக்கு பூஜை நடத்தினா்.
முன்னதாக சுற்றுப்புற கிராமங்களிலிருந்து கிராம தேவதைகளை மேள தாளங்களுடன் ஏரிக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்தினா்.
அப்போது பொதுமக்கள் மழை வேண்டி வழிபாடு நடத்தினா். இந்த வழிபாடுகளின்போது ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என அனைவரும் கிராம தேவதைகளுக்கு முன்பு அமா்ந்து உடலில் சாட்டையடித்து கொண்டு நூதன வழிபாடு மேற்கொண்டனா்.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்புப் பூஜையில் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன், திமுக ஒன்றியச் செயலாளா் கணேசன், பொதுக்குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.