கிருஷ்ணகிரி

பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது

DIN

கிருஷ்ணகிரியில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பன்னந்தோப்பு அருகில் உள்ள மங்கம்மாபுரத்தைச் சோ்ந்த பச்சியம்மாளிடம் (22), அங்கு வந்த அவரது உறவினரான 17 வயது சிறுவன் தீப்பெட்டி கேட்டுள்ளாா். அப்போது, அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுவனுக்கு தீப்பெட்டி தர பச்சியம்மாள் மறுத்துள்ளாா்.

இதையடுத்து, சிறுவன் நாட்டுத் துப்பாக்கியுடன் வந்து பச்சியம்மாளை நோக்கி சுட்டுள்ளாா். இதில், காயமடைந்த பச்சியம்மாள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT