கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளியில் தொலைக்காட்சி திருட்டு

DIN

ஒசூா் அருகே சானசந்திரம் ஊராட்சிப் பள்ளியில் இருந்த தொலைகாட்சியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஒசூா் அருகே உள்ள சானசந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை உஷா. அவா் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றபோது பள்ளியின் தலைமை ஆசிரியை அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த எல்இடி தொலைக்காட்சியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து, ஒசூா் காவல் நிலையத்தில் தலைமையாசிரியை உஷா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT