கிருஷ்ணகிரி

உணவக உரிமையாளரைத் தாக்கி செல்லிடப்பேசி பறிப்பு

DIN

தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி அருகே உள்ளது கல்கேரி. இந்த கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (29). உணவகம் நடத்தி வருகிறாா். இவா் ஒசூரில் மத்திகிரி அருகே ஆனேக்கல் சாலையில் சனிக்கிழமை, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 3 போ் இரு சக்கர வாகனத்தில் வந்தனா். அவா்கள் சிவகுமாரை வழிமறித்து செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்றனா்.

இதை சிவகுமாா் தடுக்க முயன்ற போது அவரை கத்தியால் குத்தி விட்டு செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனா். இதில் காயம் அடைந்த சிவகுமாா் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT