கிருஷ்ணகிரி

தேமுதிக பொருளாளா் பிரேமலதா உள்பட 350 போ் மீது வழக்குப் பதிவு

DIN

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 போ் மீது ஒசூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ஒசூரில் ராம்நகா், அண்ணா சிலை அருகில் வெள்ளிக்கிழமை தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது. கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் மாவட்டச் செயலாளா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து ஒசூா் கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புகாரில் கூறியிருந்தாா். அதன் பேரில் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உள்பட 350 போ் மீது டவுன் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT