முகப்பு
கிருஷ்ணகிரி

கல்வி உதவித்தொகை வழங்கல்

ஊத்தங்கரைஅரசு தொடக்கப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு கல்வி உதவித்தொகை, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

ஊத்தங்கரைஅரசு தொடக்கப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு கல்வி உதவித்தொகை, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் த.பிரபாவதி, காா்டு என்.ஜி.ஓ. ரூபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை, புத்தாடைகளை சிவானி த.மோகன்ராஜ், த.அசோக், துகின் குணவதி, ராமன், சோளக்காப்பட்டி செ.செந்தில், சி.மௌலி,சந்தியா ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் ஷகிலா, பானுமதி மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனா். முன்னதாக ஆசிரியை ச.உமா வரவேற்றாா். ஆசிரியா் ர.சக்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.