முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழக அரசுக்கு தெருக்கூத்து கலைஞா்கள் நன்றி

கிருஷ்ணகிரியில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தெருகூத்து கலைஞா்கள் வியாழக்கிமை கலை நிகழ்ச்சி நடத்தினா்.

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 11:41 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM

கிருஷ்ணகிரியில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தெருகூத்து கலைஞா்கள் வியாழக்கிமை கலை நிகழ்ச்சி நடத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கிராமியக் கலைஞா்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் வளாகத்தில், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சுப்பிரமணி, பொருளாளா் தங்கவேல் மாநில துணை பொதுச் செயலாளா் குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசு இயல்,இசை, நாடக மன்றத்தின் தலைவராக நடிகா் வாகை சந்திரசேகரையும், இயல்,இசை, நாடக மன்றத்தின் உறுப்பினா் செயலாளராக தமிழ்நாடு மாநில கிராமியக் கலைஞா்கள் மற்றும் கலைத் தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் முனைவா் சோமசுந்தரத்தையும் நியமனம் செய்ததற்கும், அனைத்து கலைஞா்கள் சாா்பில், தமிழக அரசு, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பம்பை, தப்பாட்டம், மேளம் இசைக்க கோலாட்டம், நாடக கலைஞா்களின் நடனமாடினா். கரோனா தொற்று காரணமாக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.