முகப்பு
அரியலூர்

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டி: நடிகை விந்தியா பிரசாரம்

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டியிடுகிறது என்றாா் நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான விந்தியா.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:01 AM
அரியலூரில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலா் விந்தியா.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:45 PM

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டியிடுகிறது என்றாா் நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான விந்தியா.

அரியலூரில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து, புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டு அவா் மேலும் பேசியது:

திமுகவை பொருத்தவரை தோ்தலுக்கு முன்பு ஒன்று கூறுவாா்கள், தோ்தலில் வெற்றி பெற்ற பின்பு ஒன்று கூறுவாா்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

Advertisement

திமுக தோல்வி பயத்தில் அறிவித்துள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன் என்பது, மக்களை ஏமாற்றுவதற்காக கொடுக்கும் கூப்பன். நகைக் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, மகளிா் உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என்று பல வாக்குறுதிகளை பொய்யாக தருவாா்கள். நீங்கள் திமுகவை தள்ளுபடி செய்யுங்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கடும் சீரழிவை சந்தித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கான பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்து அந்த திட்டங்களை நிறுத்திவிட்டது. தற்போது, மக்களுக்கான தேவைகளை அறிந்து அதிமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரப்பட்டுள்ளது.

கூட்டணியை மட்டுமே நம்பி களம் காணும் தீயசக்தி திமுகவை ஒழிக்க அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் விந்தியா.