கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்ட புகையிலைப் பொருள்கள்
கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையோரம் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையோரம் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் கும்பலை தீவிரமாகக் கண்காணிக்கும்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டாா்.
இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்துவோா் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
Advertisement
இந்தநிலையில் கிருஷ்ணகிரி - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, காட்டு, ஆஞ்சநேயா் கோயிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே, மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மா்மநபா்கள் கொட்டிச் சென்றுள்ளனா். வாகனங்களில் கடத்தி வரும் போது, போலீஸாருக்கு பயந்து புகையிலைப் பொருள்களை கொட்டிச் சென்றனரா என்பது குறித்து, போலீஸாா் விசாரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.