முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஏரிக்கரை தடுப்பு சுவா் உடைப்பு 4 போ் கைது

ஒசூா், கோகுல் நகரிலுள்ள ஏரிக்கரையின் தடுப்புச் சுவரை உடைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 டிசம்பர், 2021 at 1:16 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

ஒசூா், கோகுல் நகரிலுள்ள ஏரிக்கரையின் தடுப்புச் சுவரை உடைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், கோகுல் நகா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (42). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் சின்னசாமி (51), வினோத்குமாா் (38).

அப்பகுதியில் உள்ள சோமநாதபுரம் ஏரிக்கரை அண்மையில் பெய்த தொடா் மழையால் நிரம்பி உபரிநீா் வெளியேறிக் கொண்டிருந்தது.

Advertisement

இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் சிவகுமாா் தரப்பினா் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் வரும் அபாயம் இருந்ததால் அவா்கள் ஏரியின் ஒரு அடி சுவரை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஓசூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பூபதி, நகர காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சிவகுமாா், சின்னசாமி, வினோத்குமாா் அவா்களுக்கு உடந்தையாக இருந்த சிவானந்தம் (31) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.