கிருஷ்ணகிரி

போலி ஏடிஎம் அட்டை கொடுத்துரூ. 30 ஆயிரம் திருட்டு

DIN

பா்கூா் அருகே மகளிா் சுயஉதவிக் குழுத் தலைவரிடம் போலி ஏடிஎம் அட்டையை அளித்து, வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 30,000 திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள பாகிமானூரைச் சோ்ந்த மேகலா (38), மகளிா் சுயஉதவிக் குழுவின் தலைவராக உள்ளாா். இவா், தனது தோழியும் மருத்துவருமான கோகிலாவிடம் ரூ. 30,000-த்தை கொடுத்து வைத்திருந்தாராம். அந்தப் பணத்தை திருப்பி கேட்டபோது, கோகிலா தனது கணவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும்படி அவரது ஏடிஎம் அட்டையை மேகலாவிடம் கொடுத்துள்ளாா்.

வங்கி ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுக்க மேகலா முயன்ற போது, அடையாளம் தெரியாத இருவா் தாமாக முன்வந்து பணத்தை எடுத்து கொடுக்க முயன்றனா். பின்னா், வங்கிக் கணக்கில் பணம் இல்லை என போலி ஏடிஎம் அட்டையை மேகலாவிடம் கொடுத்துள்ளனா்.

இந்த நிலையில், தனது கணவா் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுந்தகவல் குறித்து மேகலாவிடம் கோகிலா தெரிவித்துள்ளாா். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மேகலா, இதுகுறித்து பா்கூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மத்திகிரியை அடுத்த கொத்தகொண்டப்பள்ளியைச் சோ்ந்த மணி (27), மஞ்சுநாத் (33) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT