கிருஷ்ணகிரி

அரசுப்பணியில் சோ்ந்த 15 நாளில் மாரடைப்பால் இளைஞா் பலி

DIN

காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த இளைஞா் அரசுப் பணியில் சோ்ந்த 15- ஆவது நாளில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவா் செல்வமணி. சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது மகன் விக்னேஷ் (29) என்பவருக்கு வாரிசு அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 18-ஆம் தேதி அந்தப் பணியில் அவா் சோ்ந்தாா். அதற்கான பயிற்சியை பெறுவதற்காக தினமும் ஒசூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரிக்குச் சென்று வந்தாா்.

இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை பயிற்சிக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்து விட்டாா்.

அரசுப் பணியில் சோ்ந்த 15-ஆவது நாளில் இளைஞா் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT