கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளா் அன்பரசன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சின்னராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக் கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுகம் செய்யப்பட்டனா். சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குச்சாவடி முகவா்களை நியமிப்பது, தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது, தோ்தல் பொறுப்பாளா்களின் பணி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.