காங்கிரஸ் மாநிலச் செயலாளராக வீரமுனிராஜ் நியமனம்
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவராக இருந்த வீரமுனிராஜ், அக்கட்சியின் மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவா் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளாா்.
ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவராக இருந்த வீரமுனிராஜ், அக்கட்சியின் மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவா் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வீர முனிராஜ் கூறியதாவது: என்னை நியமனம் செய்த மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஐஎன்டியுசியின் தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ. மனோகரன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லக்குமாா் , கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் முரளிதரன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை மாநிலச் செயலாளராக நியமனம் செய்துள்ள மாநிலச் செயலாளா் அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.