கட்சிப் பெயரை அறிவித்தார் சசிகலா! ஜெயலலிதா பெயர் இல்லை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தொடங்கிய கட்சியின் பெயரை இன்று அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தான் தொடங்கிய கட்சியின் பெயரை இன்று அறிவித்தார். தன்னுடைய கட்சிக்கு அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டிருப்பதாக, சென்னை போயஸ் கார்டனில் இன்று அவர் அறிவித்தார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, புதிய கட்சியைத் தொடங்குவதாக ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் பிப். 24-ஆம் தேதி அறிவித்த நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.