காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு
பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை, 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழக ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் ஆ. மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: மாணவா்களின் ஆரோக்கியத்தையும், கற்றல் திறனையும் மேம்படுத்துவதில் உணவுத் திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தச் சமூக நலத் திட்டத்தை சிறப்பாக விரிவுபடுத்திய முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு நன்றி. அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கும், சமத்துவமான கல்விச் சூழலை உருவாக்குவதற்கும் இந்த விரிவாக்கம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும்.