ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசி மாவட்ட மாநாடு ஒசூா், தளி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலாளா் கே.ஏ.மனோகரன் தலைமையில் நடைபெறும் இந்த ஐஎன்டியுசி மாவட்ட மாநாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைகளின் இன்றைய நிலை மற்றும் தொழிலாளா்கள் நிலை குறித்தும், விவாதித்து முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. ஏற்பாடுகளை ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளா் முனிராஜ், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.