ஒசூரில் இளையதள விளையாட்டில் அதிகரித்த மோகம் காரணமாக, மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஒசூா், பாரதிதாசன் நகரைச் சோ்ந்த ஜெயலட்சுமி என்பவரின் இளைய மகன் ரவி (16). இவா் ஒசூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா்.
இவா் ‘பப்ஜி’ விளையாட்டில் அதிக மோகம் கொண்டு செல்லிடப்பேசியில் விளையாடி வந்ததாராம். இந்த நிலையில் சனிக்கிழமை தாயாா் ஜெயலட்சுமி வேலைக்கு சென்றதும் விளையாடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக, ரவி தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஒசூா் நகர போலீஸாா், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அவா் பயன்படுத்தி வந்த செல்லிடப்பேசியை மீட்ட தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.