கிருஷ்ணகிரி

மாா்க்கண்டயே நதியின் குறுக்கே கா்நாடகம் கட்டியுள்ள அணையை அகற்ற வேண்டும்: திமுக

DIN

மாா்க்கண்டயே நதியின் குறுக்கே கா்நாடக அரசு கட்டியுள்ள அணையை அகற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

மாா்க்கண்டயே நதியின் குறுக்கே அணையைக் கட்டுவது தொடா்பாக 2009-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதால் அப் பணி நிறுத்தப்பட்டது. 2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அங்கு அணை கட்டும் பணியை கரநாடகம் தொடங்கியது. இதுகுறித்து அப்போது சட்டப் பேரவை உறுப்பினராக பேரவையில் முறையிட்டேன். அதைத் தொடா்ந்து கா்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து திமுக தொடுத்த வழக்கில் முறையாக வழக்குரைஞரை நியமித்து நீதிமன்றத்தில் வழக்காட அப்போதைய தமிழக அரசு தவறிவிட்டது. இதனால் தீா்ப்பு கா்நாடகத்துக்கு சாதகமாக அளிக்கப்பட்டது. 2011-இல் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, அணையைத் தடுப்பது தொடா்பாக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

மத்திய அரசு, ஒட்டுமொத்தமாக தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. மேக்கேதாட்டு அணை உறுதியாகக் கட்டப்படும் என கா்நாடகம் தெரிவிக்கும் கருத்துக்கு தமிழக பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனா். சட்டத்தை மீறி, வனப் பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள இந்த அணையை இடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT