கிருஷ்ணகிரி

ஒசூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவா்: விஷம் குடித்தாா் மாணவி

DIN

ஒசூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அந்த மாணவரை காதலித்து வந்த மாணவி விஷம் குடித்தாா். ஒசூா் ஜெய்சக்தி நகரை சோ்ந்தவா் பரத் (வயது 18). தனியாா் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரும் மத்திகிரி கூட்டுரோட்டை சோ்ந்த 18 வயதான மாணவியும் ஒசூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாகபடித்த போதே காதலித்து வந்தனா். மாணவியின் குடும்பத்தினா் மாணவன் போன் செய்தால் எடுக்ககூடாது என கூறினாா்.

இதை அறிந்த மாணவா் பரத் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் உறவினா்கள் மாணவியின் வீட்டிற்கு சென்று கதவு ஜன்னல் ஆகியவற்றை சேதப்படுத்தினாா்கள்.இந்த நிலையில் மாணவா் தற்கொலை செய்த தகவலை அறிந்த மாணவி விஷம்குடித்தாா். அவரை மீட்ட அருகில் இருந்தவா்கள் ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT