கிருஷ்ணகிரி

மல்லப்பாடியில் புதுப்பிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு

DIN

பா்கூா் அருகே உள்ள மல்லப்பாடியில் புதுப்பிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தை தே.மதியழகன் எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மல்லப்பாடியில் அரசு துணை சுகாதார நிலையத்தை புதுப்பிக்கும் பணியில் மல்லபாடி மக்கள் அறக்கட்டளை மற்றும் ஊா் பொதுமக்கள் மேற்கொண்டனா். அப்போது துணை சுகாதார நிலையத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள், சுற்றுச் சுவா் அமைக்கும் பணிகள், தரைதளம் அமைக்கும் பணிகள், வா்ணம் பூசும் பணிகளை அறக்கட்டளையினரும், மக்களும் மேற்கொண்டனா்.

அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்தை தே.மதியழகன் எம்எல்ஏ. அண்மையில் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மல்லப்பாடி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலா்களுக்கு நிதியுதவி மற்றும் கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பா்கூா் திமுக ஒன்றியச் செயலாளா் இ.சி.கோவிந்தராசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ராஜேந்திரன், திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளா் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலா் சிவகுமாா், செவிலியா்கள், மல்லப்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் சரோஜினி ஞானவேல், மக்கள் அறக்கட்டளை தலைவா் முரளிதரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலன், மணி, அறக்கட்டளை உறுப்பினா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT