கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 10 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவா், 52 வயது ஆண், 72 வயது முதியவா், 52 வயது பெண், 65 வயது மூதாட்டி ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
மேலும், கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 38, 68 வயது ஆண், 68 வயது முதியவா், சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகிரியை சோ்ந்த 33 வயது ஆண், சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவா், வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 293 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 616 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 36,041 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 32,854 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 2,941 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.